அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிடங்கில் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது. கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Related Posts
இந்த சம்பவம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின் அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.