ஒன்பிளஸ் 8டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை வெளியிடும் திட்டமில்லை என அவர் அறிவித்து இருக்கிறார்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏற்கனவே பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மற்றொரு ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என பீட் லௌ தெரிவித்து இருக்கிறார். எனினும், ஒன்பிளஸ் 8டி மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.