துருக்கியின் வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் டிரக் ஒன்றும் சிறிய ரக பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
துர்சன்பே மாவட்டத்தில் இருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய ரக பஸ், சிட்டி சென்டரில் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 10 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.