2021 ஆம் ஆண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைக்கு ஒரு மாணவன் வருகை தந்திருத்தால் கூட கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.