கொழும்பு – கொள்ளுப்பிட்டி டுப்ளிகேசன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய கட்டிடம் ஒன்றின் கீழ்த்தளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக குறித்த கட்டிடத்தின் கீழ்தளம் முழமையாக நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.