சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதன்பிறகு கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
Related Posts
இந்தநிலையில் சிம்பு இன்னொரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதில் கதாநாயகியாக நடிக்க நிதி அகர்வால் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஜெயம்ரவி ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்குகிறது. 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து உடனடியாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறார்.